Total Pageviews

Thursday, October 25, 2012

எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்


ஜோதிடம் சொல்பவர், ஐந்து ரூபாய் தந்தால் 2 கேள்விகள் கேட்கலாம். என்று சொன்னார்.
இரண்டு கேள்விகளுக்கு ஐந்து ரூபாயா? என்று வந்தவர் கேட்டார் ஆமாம் உங்கள் இரண்டாவது கேள்வி என்ன? என்றார் ஜோதிடம் சொல்பவர்.
கோயில் உண்டியலை திருடியது உண்மையா?
உண்மைதான் ஜட்ஜ் ஐயா, ஆனா அதுல இருந்த பணத்தை எடுத்துகிட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்.

ஹேலா நான் குமார் பேசுகிறேன். என் கடனை எப்ப திருப்பி தருவீங்க?
சேலத்துல் 3  குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். ஈரோடுல   6 குமார்கிட்டே கடன் வாங்கியிருக்கேன். யாரா இருந்தாலும், தெளிவா விபரமா பேசுங்க குழப்பாதீங்க.

ராமு - 10 ரூபாய் இருந்தா கொடு
சோமு - என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை
ராமு - பரவாயில்லை, கொடு நான் சுத்தம் செய்து கொள்கிறேன்.

பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?
முதல்ல பூட்டை பூட்டணும்...!

எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்
எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக்கும்.

சாப்பிட முடியாத மீன் எது?
விண்மீன்

பாபுன்றது என் ரூம் மேட்டோட பேருப்பா!


மறதிக்கு பெயர் போன புகழ் பெற்ற ஓர் அறிஞர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் சோதனையாளர் பயணிகளிடம் டிக்கெட்டைக் வாங்கி பார்த்து விட்டு அந்த அறிஞரிடம் வந்து அவருடைய டிக்கெட்டை கேட்டார். அறிஞர் அதை வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார்.

அவர் யார் என்பதை அறிந்திருந்த டிக்கெட் சோதனையாளர் பரவாயில்லை நான் உங்களின் வார்த்தைகளை நம்புகிறேன். டிக்கெட் தேட வேண்டாம் என்று சொன்னார். அதற்கு அறிஞர் எனக்கு தற்போது பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. நான் இப்பொழுது எந்த ஊருக்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்பது தெரியவே அந்த டிக்கெட் எனக்கு இப்பொழுது தேவைப்படுகிறது.

பால் எப்போது வெட்கப்படும்?
அதன் ஆடையை எடுத்தப்பின்.

காலில் சுத்தின பாம்பு கடிக்குமா? கடிக்காதா?
ஏன் கேட்கிறே?
உங்க கால்ல ஒரு பாம்பு சுத்தியிருக்கேன்னு கேட்டேன்...!

இந்த காலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு
ஆமா சரியா சொன்னீங்க...
தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வெச்சீங்க...!

நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ற?
பாபுஸ் பேஸ்ட்
நீ என்ன சோப் யூஸ் பண்ற?
பாபுஸ் சோப்
அது என் புது பிராண்டா?
அட பாபுன்றது என் ரூம் மேட்டோட பேருப்பா !.

வெளியே விட்டா கெட்டுப்போயிடும்


மனைவி: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கி விட்டார்.
டாக்டர்: இன்னும் சில நிமிஷத்தில் வந்து விடுகிறேன்
மனைவி: அதுவரை நான் என்ன செய்வது?
டாக்டர்: பென்சிலை உபயோகியுங்கள்.


ப்ரௌன் சுகர்
வீட்டுலே சுகர் இருந்தாக் கூடவா போலீஸ் அரெஸ்ட் பண்ணும்?
நீ வேற... அவரோட வீட்டுலே ப்ரௌன் சுகர் இருந்துச்சாம்!


கல்யாணம்

”ஏங்க! நமக்கு கல்யாணம் பண்ணி வச்ச அய்யரோட மகனுக்கு நாளைக்குக் கல்யாணமாம்.”
”இத்தனை கல்யாணம் பண்ணி வச்சும் புரிஞ்சுக்காத மனுசனா இருக்காறே!!


என்னால் என் நண்பர்கள் துன்பபப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
உடனே அவர்களுக்கு உதவி செய்வாயா?
நான் கண்ணை மூடிக் கொள்வேன். இல்லாவிட்டால் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவேன்.

குழந்தையை ஏன் பிரிட்ஜில் வைத்து பூட்ரீங்க ?
வெளியே விட்டா கெட்டுப்போயிடும் அதான்!.

ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?


மளிகை கடைக்காரரை கட்டிக்கிட்டது தப்பா போச்சு?
ஏன்?
கிஸ் கேட்டா எத்தனை கிலோன்னு கேட்கிறார்...!

அவர் ஆற்ற வேண்டிய வேலை நிறைய இருக்கா, யார் அவர்?
டீ கடையில் டீ ஆற்றுபவர்.

நான் எப்பவும் சீப்பாதான் வியாபாரம் பண்ணுவேன்.
எப்படி கட்டுபடியாகும்?
கட்டுபிடியாகுங்க வாழைப்பழத்தை சீப்பாதானே கொடுத்தாகணும்.

டீ குடிச்சதும் டம்ளரை கழுவறீங்க?
டிபன் சாப்பிட்டு காசில்லைன்னா, மாவட்டறதில்லையா, அது மாதிரி தான் சார்...!

ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சி.
ஏன்.
எப்பபார்த்தாலும் எடையை குறை எடையை குறை என்கிறார்.

ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?
ரேஷனில் எடை குறையும்.
பேஷனில் உடை குறையும்.

கந்தசாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!


இரண்டு போலீஸ்காரர்கள் ஏன் அந்த வாழை மரத்தை சுற்றி சுற்றி வருகிறார்கள்.
அங்கே கொலை விலை போகுதாம்.

லஞ்சம் கேட்டதால பொது மக்கள் சக்கையாய் பிழிஞ்சு எடுத்துட் டாங்களா, யாரை?
கரும்பு இன்ஸ்பெட்டரை.

ஹலோ.. போலிஸ் ஸ்டேஷனா? கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.
தப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...!

மாமூல் ரொம்ப பப்ளிக்கா மாறிடுச்சி.
ஏன் சலிச்சிக்கிறீங்க?
பின்னே என்னங்க? போலீஸ் ஸ்டேஷன்ல பாருங்க. விழா எடுத்து திருடனுக்கு மாமூல்
மாணிக்கம்னு இன்ஸ்பெட்டர் பட்டம் தர்றாரு.

திருடனுக்கும் போலீசுக்கும் என்ன வித்தியாசம்?
தொப்பைதான்.

என்னை கண்டு எல்லோரும் போலீஸ்னு நெனைச்சி பயந்துக்கிடுறாங்க.
ஆமா இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க...!

வாழ்க்கையிலே பல நாள் ஜெயில்லே கழிஞ்சு போச்சுன்னு வருத்தப்படுறீங்களே...!
என்ன தப்பு செஞ்சீங்க?
நீங்க வேற....! ஜெயிலராயிருந்தேன்...!

அந்த ஆபிசர் கமிஷன் வாங்கினது தெரிஞ்சு போச்சு.
அப்புறம்?
கமிஷனை விசாரிக்க ஒரு கமிஷன் போட்டாங்க.
பின்ன என்ன ஆச்சு?
கமிஷன்கிட்டே கமிஷன் கொடுத்து தப்பிச்சிட்டார்.

கள்ள நோட்டு அடிச்ச, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?
ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல,
கந்தசாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!

திருடன் - எதுக்கு என்ன ஜாமீன்ல எடுத்தீங்க..!
போலீஸ் - நீ உள்ள போனதிலேர்ந்து என்னோட மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி...!

----------------------------------------------------

பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.


நம்ம மேனேஜர் பத்மாசனத்தில் இருக்கார்
நம்ம மேனேஜர்க்கு யோகாசனம் எல்லாம் தெரியுமா?
அட, நீ வேற அவர் டைப்பிஸ்ட் பத்மாவோட மடியில் இருக்கார்.

கிளார்க் ராமசாமி நிறைய லஞ்சம் வாங்குவாரோ?
எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?
அவர் சட்டையில ஏகப்பட்ட பாக்கெட் இருக்கே...!

ஆபிஸ்ல தூங்கிகிட்டே இருப்பீங்களாமே, அப்படியா?
அபாண்டமான பொய் சார், மதியம் 2 மணிக்கு தூங்கி 5 மணிக்கு எழுந்தக்குவோம்.

5 மணிக்கு ஆபிஸ்ல இருந்து வந்துடுவீங்களே 6 மணிக்கு வர்றீங்களே ரொம்ப வேலையா?
ஊஹும் பியூன் எழுப்ப மறந்துட்டான்.

என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்
எப்படிச் சொல்றே
பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.

ஆபிசுக்கு குடிச்சிட்டு போதையில போனது தப்பாப் போச்சு
தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்களே!

எங்க மேனேஜர் அமைதியா அஞ்சு நிமிஷம் கூட சீட்ல உட்காரவே மாட்டார்.
அவ்வளவு சுறுசுறுப்பா?
ஊஹும், அவருக்கு மூல வியாதி!.

ஆபீஸ்க்கு குழந்தைகளை கூட்டிட்டு வந்திருக்கியே எதுக்குய்யா?
என் குழந்தைகளோட தூங்கிதான் எனக்கு பழக்கம் சார்...!

வேலை செய்யும் நேரத்தில் சீட் ஆடி மேனஜரிடம் மாட்டியதும், மேனேஜர் ராமனின் சீட்டை கிழித்து விட்டார். அப்புறம் என்ன ஆச்சு,
வேறு ஒரு புது சீட்டு கட்டு வாங்கி ஆடினார்கள்.

ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்கேள, ஏன்?
கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.

எங்க மேனஜர் வரும் போது, மரம் மாதிரி நின்னுக்கிட்ருந்தது தப்பா போச்சு
ஏன்?
கூப்பிட்டு அறு, அறுன்னு அறுத்து தள்ளிட்டார்.

எங்க ஆபிஸ்ல வேலை செய்ற எல்லோரும் கை நீட்டி லஞ்சம் வாங்க மாட்டாங்க...!
அப்படியா?
ஆமா, நீங்க தான் கை நீட்டி லஞ்சம் கொடுக்கனும்.

உங்க பிரா கம்பெனியோட கிளைகள் பல ஊர்ல இருக்காமே எந்தெந்த ஊர்ல?
வியாசர்பாடி...! வாணியம்பாடி! காட்பாடி! தரங்கம்பாடி! குறிஞ்சிப்பாடி!

சுரங்க பாதை வெட்டி தப்பி செல்ல


போருக்கு போகும் போது மன்னர் மண்வெட்டியுடன் போகிறா ரே ஏன்?
தோல்வி நிலை வந்தால் சுரங்க பாதை வெட்டி தப்பி செல்லத்தான்..

மன்னா ஏன் திடீரென்று ஓட்டப் பந்தய பயிற்சி பெறுகிறீர்கள்?
போரில் புறமுதுகிட்டு ஓட வசதியாக இருக்குமே அதுதான்

மொய் கவர்ல என்ன எழுதியிருக்கு?
சாப்பாடு பிரமாதம் என் கல்யாணத்துக்கு நீயும் எதுவும் செய்யவேண்டாம்மு எழுதியிருக்கு.

மன்னா எதிரிநாட்டு அரசர் பெரும்படையுடன் நம் நாட்டை தாக்க வந்து கொண்டிருக்கிறான்.
அப்படியா உடனே நம் மகாராணியாரை இந்நாட்டு மன்னர் ஆக்கிவிடுவோம்.

இளவரசி அடங்காபிடாரியா அரசே!


மன்னர் இரவு நேர நகர்வலத்தை பன்னிரண்டு மணியோடு முடித்துக் கொள்கிறாரே ஏன்?
மிட் நைட் மசாலா ரசிகராம் அதான்.

படையெடுத்து வந்த எதிரி மன்னனை நம் மன்னர் பக்குவமாக மடக்கிட்டார்...
எப்படி?
அந்தப்புரத்தை அப்படியே எழுதி வைச்சிடறதா சொல்லிட்டாரு!

அரிசந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது?
ட்ரூ பிஸ்கட்

மன்னர் ஏன் இப்பொழுதெல்லாம் நகர்வலம் போவதில்லை?
நாய்தொல்லை தாங்க முடியவில்லையாம்.

சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு தன் மகளை மணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே!
இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே!

போர்கைதி தெரியும், அதென்ன பேர் கைதி.
அரசரை பேர் சொல்லி கூட்பிட்டானாம்.

மகாராணியின் நகைகளை மார்வாடி கடையில் அடகு வைக்கும் போது இவனை கையும் களவுமாக பிடித்து வந்திருக்கிறோம் மன்னா...!
அடப்பாவிங்களா கைச் செலவுக்கு காசில்லைன்னு நான் தான் யாருக்கும் தெரியாமல் அடகு வைக்கச் சொன்னேன்.

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...