Total Pageviews

Thursday, April 30, 2015

என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!"




"டாக்டர் சார்! என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!"

""டாக்டர் :ஏன் என்னாச்சு?"

"அது ஒண்ணுமில்லை டாக்டர் என் கூந்தலில் இயற்கையாகவே மணம் இருக்கா இல்லையான்னு மோந்து பார்த்தார்!"

 என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது! டாக்டர் !

அம்மா! நீங்கள் தலை குளித்து எத்தனை நாளாட்சு !

30 நாள் தான் ஆவுது சார் !

அதான் !

**********************************

எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்தவர் என்ன பண்றதுன்னு
தெரியாம ரொம்ப நேரம் திரு திருன்னு முழிச்சுகிட்டு இருந்தார் !

அப்புறம்?

புதுசுல்ல! அப்புறம், நான் தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்…!

*************************************

செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கல்கிரயம் இல்லைன்னு நகை வாங்கினது தப்பா போச்சு!"

"என்னாச்சு?"

"பேங்க்ல அடகு வைக்கப் போனப்ப இது தங்கமே இல்லைனு சொல்லிட்டாங்க"

************************************

"செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு..?"

"சின்ன சத்தம் கேட்டாகூட உடனே முழிச்சுப்பேன் சார்!"

************************************
 
சீரியல், சினிமா இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

எடுக்கறவங்க அழுதா அது சினிமா ! பாக்கறவங்க அழுதா அது சீரியல் !

*************************************

Tuesday, April 28, 2015

எவ்வளவு பெரிய அறிவாளி நீ !



"உங்க வீட்ல தினமும் மனைவி சமையல்தானா?"

"எப்படி டாக்டர் கரெக்டா கண்டுபிடிச்சீங்க...?"

"தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன்னு நீங்கதானே சொன்னீங்க...!" 

*****************************
"அந்த ஆஸ்பத்திரியில பேஷன்ட்டை நல்லா  கவனிச்சுப்பாங்களாமே... அப்படியா?"

 "ஆமா ஊசி போட ஒரு நர்ஸ்,  தடவிவிட ஒரு நர்ஸ்னு ரெண்டு பேர் இருக்காங்களே...!" 


****************************


"டென்ஷனுக்கு மாத்திரை எழுதிக் குடுத்தேனே... அதை ஏன் வாங்கிச் சாப்பிடலை...?

"மாத்திரையோட விலையைக் கேட்டாலே, ஒரே டென்ஷனா வருது  டாக்டர்!"

****************************

"ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் உங்க கணவர் பிழைப்பார்..."

அப்படியா !

"அப்படின்னா, நானும் என் மாமியாரும் ராசியாகிட்டோம்னு அவர்கிட்ட சொல்லிப்பாருங்க டாக்டர்..!"

****************************

இன்டர்வியூக்குப் போனியே என்னாச்சுடா.... 

அவங்க சொன்னதத் தாண்டா செஞ்சேன். ஆனாலும் வேலை கிடையாதுனு விரட்டிட்டாங்டா................ 

 அப்படியா..? என்னாச்சுடா....?

 இண்டர்வியூ ரூமுக்குள்ள போனதும், மானேஜர் Take Your Seat னு சொன்னார்.....  

நானும் "சேரத்தான் தூக்கச் சொல்றாருனு நினைச்சு"  நாற்காலிய தூக்கி வெளில போட்டுட்டேன்....

அதுக்கு போய்  என்னை வெளிய அனுப்பிட்டாங்கடா.....

எவ்வளவு பெரிய அறிவாளி நீ ! உனக்கு வேலை இல்லைன்னு சொல்லிடாங்களே நண்பா !


**********************

Friday, April 24, 2015

நான் படிக்க வைக்கவே இல்லயே அது எப்படி பெயில் ஆகும் ?



டாக்டர் : உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு!.

நோயாளி : நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும் ?

*******************

"இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து வேலை செஞ்சேன்"

"அவ்வளவு பிசி ஒர்க்கா?"

"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும் எழுப்பிவிடலை".

*******************
"அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?"

"ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.."

**********************

காதலன் : இன்னிக்கு நைட் 1 மணிக்கு நாம ஊர விட்டு ஓடிப் போய் விடலாம்...!

காதலி: எனக்கு தனியா வர பயமா இருக்கு....

காதலன் : அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...! சேர்ந்தே ஓடி போயிடலாம் !

காதலி:  ?!? 


**********************

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க, நான் வாய் பேச முடியாத ஊமை."

வீட்டுக்காரம்மா: " பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா... எனக்கு காது கேட்காது."

______________

Thursday, April 16, 2015

பார்த்து வெச்ச செருப்பு!




ஒருவர் : என் கண்ணெதிரிலேயே கல்யாண வீட்ல செருப்ப அடிச்சிட்டு போய்ட்டான்.

மற்றொருவர் : அது உங்களுடையதா?

ஒருவர் : இல்ல, நான் எடுத்துட்டு போகலாம்னு பார்த்து வெச்ச செருப்பு!


*****

பிச்சைக்காரன் : ஒரு இருபது ரூபாய் இருந்தா தருமம் பண்ணுங்க சாமி.

நம்மவர் : அது என்னயா இருபது ரூபாய் கணக்கு?

பிச்சைக்காரன் : என்  காதலிக்கு  செல் போன் "topup" செய்யனும்  சாமி!


*****

ஒருவர் : அவரு போலியான டாக்டருன்னு எப்படி சொல்றீங்க?

நம்மவர் : நாய் துரத்துறது மாதிரி கனவு வருதுன்னேன். அதுக்கு ரெண்டு மூணு கல்லை கையில
வச்சிக்கிட்டு தூங்குங்கன்னு சொல்றார்.

*************
நர்ஸ் 'கமலா':  "போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு...மார்ச்சுவரிக்கு உள்ளே போன
டாக்டர் மாணிக்கம் ஏன் அறக்க, பறக்க ஓடி வர்றார்?

நர்ஸ் 'விசாலம்' : "அவர் போஸ்ட்மார்ட்டம் செய்யறதுக்கு போன....அந்த இறந்த
'பெண்' பிணத்திலிருந்து....'வலிக்காம ஆப்பரேசன் பண்ணுங்க டாக்டர்னுட்டு குரல்
வந்ததாம்'!!!

************

Wednesday, April 15, 2015

என் கொலுசைக் காணோம்”



”இனி மேல் குடிக்கமாட்டேன்னு என்னோட வீட்டுக்காரர்
கால்..ல.. விழுந்து மன்னிப்புக் கேட்டாரு”

“”அப்புறம்?”

"“என் கொலுசைக் காணோம்”

#####

உங்க தாத்தா ஏன் கோபமா இருக்கார்?

அவரோட கனவுக்கன்னி, கட்சியிலே சேர்ந்துட்டதால
ஒரு வகைல அவருக்கு உடன் பிறப்பு ஆயிட்டாங்களாம்…!

#####

உங்களை இப்படி ரத்தம் வர்ற மாதிரி அடிச்சிட்டு ,
உங்க மனைவி ஏன் தலைமறைவாயிட்டாங்க..?

அவ ரொம்ப பயந்த சுபாவம் இன்ஸ்பெக்டர்..!

#####

வாத்தியார் : ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?

மாணவன் : ஊறுகாய் சார். . .

#####

“சொத்துக் கணக்கு கேட்டதுக்கு நம்ம தலைவர் அவருக்கு
பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியாரை கோர்ட்டுக்கு
அழைச்சிட்டு வந்திருக்காரே ஏன்?”

“படிக்கிற காலத்திலேயே இவருக்கு எந்தக் கணக்கும்
தெரியாதுன்னு சாட்சி சொல்லத்தானாம்”

#####

“”வேலை முடிஞ்சு இவ்வளவு லேட்டா வீட்டுக்குப் போறீயே…

வீட்டில் மனைவி திட்டமாட்டாங்களா? ”

“”எனக்குத்தான் கல்யாணமே ஆகலையே?”

“”அப்புறம் ஏன் லேட்டாப் போகிறே?”

#####

பெண்களுக்கே இங்கு சமாதானங்கள் தேவைப்படுகிறது....

ஆண்கள் என்னைக்கு கோச்சுக்கிறாங்க...

கோச்சுக்கிட்டா மட்டும் யார் சமாதான படுத்த வராய்ங்க...

அவங்கள அவங்களே சமாதானப்படுத்திக்கினாதான் உண்டு.

#####

மன்னர், மகாராணியைக் கடத்தும்போது சும்மாவா
இருந்தார்..?

யார் சொன்னது கடத்தியவன் காலைத் தொட்டு
வணங்கி விட்டல்லவா வந்தார்…!

#####

அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு...

மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!

#####

பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
.
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..

#####

கமலா, அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே..?

உடம்பு முடியலைனு சொன்னதும், ஆட்டோ வெச்சு
அக்கறையா என் மருமகள் அவரிடம் கூட்டிப்
போனாளே…!

#####

எதுனா போட்டுக் கொடுங்க சார்..!

நேத்து உன் பொண்டாட்டியை சினிமா
தியேட்டர்ல பார்த்தேன், கூட யாரோ ஒரு
தடிப்பையன் வந்திருந்தான், போதுமா..!

Thanks to Mr.R.P.Karthik

Sunday, April 12, 2015

ஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை!



சுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு

வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார்.

 வழியில் சிக்னலுக்காக காத்திருந்தார். அப்போது ஒரு அசாரிரி ! நில் சிக்னல் போட்டவுடன் போகாதே !

இரண்டு நிமிடம் கழித்து செல் என்றது!

அவரும் அதே போல் செல்ல, இவருக்கு முன் சென்ற ஓருவர் லாரி மோதி பலியாகி விட்டதை கண்டு,

சற்று பதட்டத்துடன் அலுவலகம் வந்து சேர்ந்தார்.

இவரது அலுவலகம் 7வது மாடியில்,

லிப்டுக்குச் செல்ல உள்ளே புகும் நேரத்தில்,

ஒரு கை அவரை வெளியில் பிடித்து இழுத்து, வாருங்கள் நடந்தே செல்லலாம் என்றது.

வந்தவரும் சுரேசும் படிக்கட்டு வழியாக நடந்து 3வது மாடி செல்லும் போது லிப்ட் கம்பி

அறுந்து அதில் சென்ற 4 பேர் மரணம் !

சுரேஸ்  : அய்யா, நீங்கள் யார் ? என்னை ஏன் காப்பாற்றீனீர்கள் ?

வந்தவர் : நான் தான் கடவுள் !

சுரேஸ் : அப்படியா ! இப்போது வந்து காப்பாற்றினீகளே ! ஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை!

கடவுள் : உன் மனைவியின் பிரார்த்தனையே!  உன்னை அப்போதும், இப்போதும் காப்பாற்றியுள்ளது.

சுரேஸ் :  ஞேஏஏஏஏ!!!!!!!

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...